புதையல் தோண்டிய 5 பேர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது..

ஆசிரியர் - Editor I
புதையல் தோண்டிய 5 பேர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது..

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் புதையல் தோண்டிய ஐவரை நெடுங்கேணிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பிரதேசத்தின் பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் 

தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ஐவர் இணைந்து நேற்று முன்தினம் மாலைவேளையில் புதையல் தேடும் 

பணியில் ஈடுபட்டுள்ளனர். இப் பகுதியில் புதையல் இருப்பதான தகவலின் பேரிலேயே குறித்த ஐவரும் புதையல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்பும் இப் பகுதியை அண்டிய பகுதிகளில் இனம்தெரியாத சிலர் இரு தடவைகள் புதையள் தேடிய நிலையில் 

முயற்சி வெற்றியளிக்காது கைவிட்டுச் சென்றிருந்த நிலையில் அப்பகுதியை பொலிசார் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்துள்ளனர். 

சுமார் 6 அடி தாழப் பகுதியில் புதையல் இருப்பதாக கூறப்படும் நிலையில் குறித்த ஐவரும் 4 அடி வெட்டிய நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் ஆரம்ப விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு