வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அட்டகாசம்..

வாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக் குழுவென்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு 

வீட்டின் கதவு ஐன்னல்  கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை  வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சினிமா பாணி போன்று நடைபெற்ற இச் சம்பவமானது தாமரை வீதி வண்ணார் பண்ணையில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..

மேற்படி முகவரியிலுள்ள வீடொன்றுக்கு மூன்று மோட்டார் சைக்கிலில் சுமார் 6 முதல் எட்டு பேர்வரையான வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆயினும் தமது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஒரு குழுவினர் ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொருக்கியவாறு வருவதை அவதானித்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். 

அவ்வாறு வீட்டுக்கார்ர்கள் கத்திய போதிலும் வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் தம்மிடமிருந்த வாள்கள் இரும்பும் கம்பிகள் கோடாரிகளால் வீட்டின் கதவு, ஐன்னல் , 

தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட அங்கிருந்த ஏனைய பொருட.கள் பலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இதன் போது வீட்டிலிருந்த பெண்மணி பொருட்கள் எதனையும் உடைக்க வேண்டாமென கெஞ்சிக் கேட்டிருந்த போதிலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் தொனர்ச்சியாக அடித்து நொருக்கியுள்ளனர்.

இவ்வாறு அனைத்தையும் அடித்து நொருக்கிவிட்டு வீட்டிற்குள் பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். இதனையடுத்து வீடு பற்றியெரிய அயலவர்கள் ஓடி வர வாள்வெட்டுக் குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதே வேளை தென்னிந்திய சினிமா படங்கே் போன்று மோட்டார் சைக்கிலில் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் அனைத்து அட்டகாசங்களையும் புரிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

 இதன் பின்னர் வாள்வெட்னுக. குழுவின் இத்தகய அட்டகாச சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு