உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி - இந்திய வீரர்கள் வெற்றி

ஆசிரியர் - Editor II
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி - இந்திய வீரர்கள் வெற்றி

இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. 

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராகுல் பாய்தா 11-5, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யாஷ் பத்டே 10-12, 11-7, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அப்டெல் ரஹ்மாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அட்வைத் அடிக், உட்கர்ஷ் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு