மறைமுகமாக ஓய்வை அறிவித்த தோனி

ஆசிரியர் - Editor II
மறைமுகமாக ஓய்வை அறிவித்த தோனி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, ஆட்டத்தின் முடிவில் நடுவரிடமிருந்து பந்தை வாங்கியதால், அவர் இந்தத் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படுகின்றன.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில், ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடரில், இந்தியா அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்துஇ இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், கோப்பையைத் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு