எத்தியோப்பியாவில் சாலை விபத்து: 71 பேர் உயிரிழப்பு
தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா (Bona) வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாரவூர்தியில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்குக் காரணம் என அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சிடாமா மாநிலம் வழியாக பயணித்த வாகனம், பாலத்தைத் தவறவிட்டதால் ஆற்றில் விழுந்ததாக சிடாமா பிராந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வோசென்யெலே சிமியன் தெரிவித்தார்.
ஒரு திருமண விருந்தில் கலந்துவிட்டு பயணிகளில் வீடு திரும்பியபோதே இந்த விபத்து ஏற்பட்டது என வோசென்யெலே சிமியன் தெரிவித்தார்.