பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அக்கராயன் பொலிஸார், மக்கள் விசனம்..

ஆசிரியர் - Editor I
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அக்கராயன் பொலிஸார், மக்கள் விசனம்..

கிளிநொச்சி முறிகண்டி - அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செ ல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வீதியால் பயணித்துள் ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்த்தருடைய மனைவியின் தாலி கொடியை அறுக்க முயன்றுள்ள னர். இதனையடுத்து அந்த பெண் கூச்ச லிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்த்தரும் இணை ந்து திருடர்களை துரத்தியபோது ஒருவர் பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்டதன் பின் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப் படைக்கப்பட்டார்.

பின்னர் மற்றய திருடனும் மடக்கி பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவனும் பொலிஸ் நி லையத்தில் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த அக்கரா யன் பொலிஸார் 

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் 

திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக கூறும் மக்கள் பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு