காலத்தை இழுத்தடிக்கவே காணாமல்போனோர் அலுவலகம்..

ஆசிரியர் - Editor I
காலத்தை இழுத்தடிக்கவே காணாமல்போனோர் அலுவலகம்..

காணாமற் போனவர்கள் குறித்த  அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

மேற்படி அலுவலகம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் 

எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியிலும் உள்ளுக்குள்ளும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

இவ்வாறு ஒரு பகுதி மக்கள் அந்த அலுவலகம் தேவையில்லை என்றும் ஏமாற்றும் வித்தை என்றும் தெரிவித்து மேற்படி அலுவலகத்தினுடனான 

சந்திப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் இன்னொரு பகுதி மக்கள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தாலும் 

அந்த அலுவலகத்தினூடான சந்திப்பில் கலந்து கொண்டு தமது பிரச்சனைகள் தேவைகளைத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு ஒரு பகுதயினர் சந்திப்பை புறக்கணித்து  வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதே வேளையில் இன்னொரு பகுதியினர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு