தந்தையிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ரயில் பாதையை கடந்த தாயும் 10 வயது மகனும் ரயில் மோதி பலி..

ஆசிரியர் - Editor I
தந்தையிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ரயில் பாதையை கடந்த தாயும் 10 வயது மகனும் ரயில் மோதி பலி..

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தீவரகம பிரதேசத்தில் ரயில் மோதி தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய தாயும் 10 வயதுடைய மகனுமே உயிழந்துள்ளனர்.

உயிரிழந்த தாயும் மகனும், தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே 

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு