யாழ்.நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்குள் வாளுடன் புகுந்த வன்முறை கும்பல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்குள் வாளுடன் புகுந்த வன்முறை கும்பல்..

யாழ்.நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ வைக்க முயன்றபோது பொலிஸார் அங்கு வந்ததால் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையில் இருந்தவர்கள் மீதும், பொருட்கள் மீதும் பெற்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அங்கு வந்த நிலையில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு