ஓமந்தை விபத்தில் இருவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
ஓமந்தை விபத்தில் இருவர் உயிரிழப்பு..

வவுனியா ஓமந்தை பகுதியில் புதன்கிழமை (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்….

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற  ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த சங்கீதன் வயது 40 மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யோகராசா 42 ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு