நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வீட்டு சுற்றாடலில் முகமூடிகளுடன் நடமாடிய மர்ம நபர்கள்!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வீட்டு சுற்றாடலில் முகமூடிகளுடன் நடமாடிய மர்ம நபர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்றையதினம் (28) அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், 

அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக அவரது ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு