யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் மிக்சர் வாங்கியவருக்கு அதிர்ச்சி! மிக்சருக்குள் பொரிந்த நிலையில் பல்லி..

ஆசிரியர் - Editor I
யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் மிக்சர் வாங்கியவருக்கு அதிர்ச்சி! மிக்சருக்குள் பொரிந்த நிலையில் பல்லி..

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் பொறித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றுமுன்தினம் (24) இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 

அதன்போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது,

அதனுள் பொறித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, 

பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு