யாழ்.நகரில் கையடக்க தொலைபேசி திருட்டு! பெண் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் கையடக்க தொலைபேசி திருட்டு! பெண் உட்பட இருவர் கைது..

பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண்ணையும், அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞர் ஒருவரையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருடப்பட்ட கையடக்க தொலைபேசியோடு இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதன் பின்னர், இளைஞரை விசாரிக்கையில், தனக்கு அந்த தொலைபேசியை ஒரு பெண்ணே விற்பனை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்தே, கைப்பேசியை திருடிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைதான இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு