வெளிநாட்டில் வசிக்கும் பெண் ஒருவரின் சொகுசு காரின் உரிமத்தை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்த சாரதி கைது! யாழ்ப்பாணத்தில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டில் வசிக்கும் பெண் ஒருவரின் சொகுசு காரின் உரிமத்தை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்த சாரதி கைது! யாழ்ப்பாணத்தில் சம்பவம்...

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரை, மோசடி செய்யும் நோக்கில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து, அதற்கு சாரதி ஒருவரையும் நியமித்திருந்தார்.

தற்போது அந்தப் பெண் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், வாகனத்துக்கு இந்த ஆண்டுக்கான வரி அனுமதி பத்திரம், புகை பரிசோதனை செய்வதற்கு வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என கூறி வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் சாரதி அவற்றை பெற்றுள்ளார். 

வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, காரை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சாரதி முயற்சித்துள்ளார். இந்த விடயம் வாகன உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, அவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

நீதிமன்ற விசாரணைகளில் சந்தேக நபர் தன் மீதான குற்றச்சட்டை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், 

வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் உரிமையாளரான பெண்ணிடம் மீள ஒப்படைக்க உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு