யாழ்.நல்லுார் வீரமா காளியம்மன் ஆலய உற்சபத்தில் கைகலப்பு, 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் வீரமா காளியம்மன் ஆலய உற்சபத்தில் கைகலப்பு, 3 பேர் கைது!

நல்லுார் வீரமா காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் , தொடக்கு கழிக்க முதல், தொடக்குடன் ஆலய மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக மகோற்சவ காலத்தில் குருக்களுடன் முரண்பட்டுள்ளனர். அதன் போது கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளது. 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால், பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரணப்பாடு காணப்பட்டு வருகிறது. இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று, 

நேற்றைய தினம் சனிக்கிழமை பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு