தீபற்றி எரிந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொதுமக்கள்! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தீபற்றி எரிந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொதுமக்கள்! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருதங்கேணியை சேர்ந்தவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இரவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில், இரவு பத்து மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு