யாழ்.நகரில் அதிகாலைவேளை பொலிஸார் நடத்திய சோதனையில் 5 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் அதிகாலைவேளை பொலிஸார் நடத்திய சோதனையில் 5 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழில் பதிவேற்ற மோட்டார வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர். 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தின் வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது. 

இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு