யாழ்.வடமராட்சி கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது..
![யாழ்.வடமராட்சி கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது..](https://jaffnazone.com/storage/images/2022/10/arrest-wiuww.jpg)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மணல்காட்டில் 31 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மணல்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 31 வயதானவரே இவ்வாறு பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.சந்தேகநபர் சட்டநடவடிக்கைக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.