யாழ்.அச்சுவேலியில் இளைஞனை வழிமறித்து கோடாரிக் கொத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் இளைஞனை வழிமறித்து கோடாரிக் கொத்து!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த நபர் வேலைக்கு செல்வதற்காக நேற்று வியாழக்கிழமை (06) காலை , தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளை, 

உலவிக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் நபரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு, கோடரியினால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை கறுத்த துணியினால் மூடிக்கட்டி இருந்தனர் என தாக்குதலுக்கு இலக்கான நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார் . 

காயமடைந்த நபர் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை, குறித்த ஆலயத்திற்கு சொந்தமான ஆலயத்துடன் உள்ள காணியினை அறிக்கைப்படுத்தி, ஆலய நிர்வாகத்தினரால் வேலி அமைக்கப்பட்டபோது, 

ஆலய காணியையும், அருகில் உள்ள காணியையும் இணைத்து மைதானமாக பாவித்து விளையாடி வந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 

கடந்த ஏப்ரல் மாதம் காணியை சுற்றி அடைக்கப்பட்டு இருந்த வேலி இனம் தெரியாத நபர்களால் பிடுங்கி எறியப்பட்டு இருந்தது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு 

விசாரணையில் முன்னெடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு