புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து தாக்கிய வன்முறைக் கும்பல்!- 2 பேர் காயம்.

ஆசிரியர் - Admin
புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து தாக்கிய வன்முறைக் கும்பல்!- 2 பேர் காயம்.

யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று மதியம் வீடு புகுந்து, வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும், முதலாவது மகளின் கணவரும் இருந்தநேரம், மூன்றாவது மகளின் கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். முதலாவது மகளின் கணவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர் 7பேர் கொண்ட வன்முறைக் கும்பல் கையில் பொல்லுக்கட்டைகளுடன் வீடு புகுந்து, தாய் அவரது மூன்று மகள்கள் மற்றும் மூத்த மகளின் கணவன் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் தாயின் தலை மற்றும் வலது கை மீதும், முதலாவது மகளின் கணவரின் இடது காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு