போதைக்கு அடிமையான மகனை திருத்தித் தரக்கோரி பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
போதைக்கு அடிமையான மகனை திருத்தித் தரக்கோரி பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்..

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதையடுத்து , இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர் , தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார். 

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு