தலையில் தீ வைக்கப்பட்டதால் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
தலையில் தீ வைக்கப்பட்டதால் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

யாழ்.குருநகரை அண்டிய பகுதியில் உள்ள சவக்காலைக்குள் வைத்து தலையில் பெற்றோல் ஊற்றி எரிக்க முயன்றபோது படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு சனிக்கிழமை (01) பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞன்,

பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது, இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 

உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 

பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு