மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு!

ஆசிரியர் - Admin
மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பதவியில் மைத்திரிபால சிறிசேன பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த முறைப்பாட்டை சந்திரிக்கா சமர்ப்பித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு