வீட்டு அறை ஒன்றுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த 25 வயது இளைஞர் கைது! யாழில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டு அறை ஒன்றுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த 25 வயது இளைஞர் கைது! யாழில் சம்பவம்..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிசாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.நேற்று  மாலை அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 

அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பால சூரிய தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபிள்களான ஆனந்தராஜ், இந்திக்க, விதுஷன், சமக்தா ஆகியோரின் சுற்றி வளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு