கட்டுப்பாடற்ற வேகம், மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து! அடுத்தநாள் கனடா பயணமாக இருந்த இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம், மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து! அடுத்தநாள் கனடா பயணமாக இருந்த இளைஞன் பலி..

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி, புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி, மட்டுவில் பகுதியை சேர்ந்தபி பனுஜன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞர் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கனடாவுக்கு பயணமாகவிருந்த நிலையில் இத் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு