பலத்த காற்றினால் யாழ்ப்பாணம் - கொக்குவிலில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..

ஆசிரியர் - Editor I
பலத்த காற்றினால் யாழ்ப்பாணம் - கொக்குவிலில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதமடைந்தது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமானது.

அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு