யாழ்ப்பாணம் - தீவு பகுதிகளுக்கான சகல படகு சேவைகளும் நிறுத்தம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - தீவு பகுதிகளுக்கான சகல படகு சேவைகளும் நிறுத்தம்!

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து நாளையதினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை (24)கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு