யாழ்.புன்னாலை கட்டுவனில் நடந்தது என்ன? விபத்தை ஏற்படுத்தியது பொலிஸாரே மக்கள் குற்றச்சாட்டு/ பொலிஸாரை கவனித்த பொதுமக்கள்/ பொலிஸார் நிறைவெறியில் நின்றதாக தகவல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலை கட்டுவனில் நடந்தது என்ன? விபத்தை ஏற்படுத்தியது பொலிஸாரே மக்கள் குற்றச்சாட்டு/ பொலிஸாரை கவனித்த பொதுமக்கள்/ பொலிஸார் நிறைவெறியில் நின்றதாக தகவல்...

யாழ்.புன்னாலைக்கட்டுவன் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், பொலிஸார் குறித்த நபரை துரத்திச் சென்று காலால் உதைத்த நிலையில் நிலைதடுமாறு அவரின் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாக பிரதேச மக்கள் தொிவிக்கின்றனர். 

சம்பவத்தில் மின்சாரசபை ஊழியரான உரும்பிராயை சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் (வயது41) என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவர் உயிரிழந்த நபரை மறித்தபோது அவர் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். 

இதனையடுத்து அவரை துரத்திச் சென்ற பொலிஸார் காலால் உதைத்த நிலையில் நிலைதடுமாறு மின்கம்பத்துடன் மோதி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து இரு பொலிஸாரையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவர்களை நையப்புடைத்ததாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா என்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு