பேருந்து வசதியின்றி அந்தரிக்கும் யாழ்ப்பாணம் - நயினாதீவு மக்கள்..

ஆசிரியர் - Editor I
பேருந்து வசதியின்றி அந்தரிக்கும் யாழ்ப்பாணம் - நயினாதீவு மக்கள்..

நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். 

நயினாதீவில் ஒரு பேருந்து, தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை காலமும் ஈடுபட்டு வந்ததுள்ளது. நயினாதீவிற்கு வேலைக்கு செல்வோர், 

சுற்றுலா செல்வோர் பிரதேசவாசிகள் என பலரும் தீவினுள் தமது போக்குவரத்திற்கு பேருந்து சேவையையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்து பழுதடைந்துள்ளமையால், 

பேருந்து சேவை இன்றி பலரும் கால் நடையாகவே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலைமை காணப்படுகிறது. எனவே விரைந்து பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு