பாடசாலை நேரத்தில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!!! யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் அமுல்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை நேரத்தில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!!! யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் அமுல்..

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தரும் போதும், 

பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு