யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று புதன்கிழமை (17) மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  படகு ஒன்று  கைப்பற்றப்பட்டுள்ளது.

மின் ஒளி பாய்ச்சி அனுமதியற்ற வலைகளை  பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே  குறித்த படகுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கட்டைக்காட்டை சேர்ந்தவர் என்பதோடு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில்  பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு