யாழ்.மீசாலையில் விபத்துக்குள்ளான வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் விபத்துக்குள்ளான வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி..

வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பயணித்த உத்தியோகபூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம், பாதசாரிகள் கடவையில் வேகத்தைக் கட்டுப்படுத்திய நிலையில் அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி 

வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆளுநர் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு