யாழில் கொரோனா தொற்றினால் பிரான்ஸில் இருந்துவந்த பெண் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழில் கொரோனா தொற்றினால் பிரான்ஸில் இருந்துவந்த பெண் உயிரிழப்பு!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில்  சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு