தீவிர வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட இளம் ஆசிரியை மரணம், உடற்கூற்று பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு - யாழில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தீவிர வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட இளம் ஆசிரியை மரணம், உடற்கூற்று பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு - யாழில் சம்பவம்..

யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை (13) உயிரிழந்துள்ளார். இதன்போது வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி கல்பனா (37 வயது) என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வெள்ளிக்கிழமை (12) வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (13) அவர் உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடலத்தை புதைக்குமாறு கூறி, உடலம் ஞாயிற்றுக்கிழமை (14) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு