யாழ்.வடமராட்சி வலய பாடசாலையில் நிதி சேகரிப்பு! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி வலய பாடசாலையில் நிதி சேகரிப்பு! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு..

யாழ்.வடமராட்சி வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

யாழ்.வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ்அப்  குழு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபரையும்,  வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று, 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு