யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி, மன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் மீதான விசாரணைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு