யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! போலி கடவுச்சீட்டுடன்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! போலி கடவுச்சீட்டுடன்..

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையிலையே குறித்த நபர் போலி கடவுசீட்டை தயாரித்து நாட்டை விட்டு வெளியேற முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு