யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஆடைகளற்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஆடைகளற்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு