இரு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் பூட்டப்பட்டிருக்கும்!

ஆசிரியர் - Editor I
இரு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் பூட்டப்பட்டிருக்கும்!

எதிர்வரும் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களை தவிர மதுவரி உரிமம் பெற்ற மதுபானசாலைகள் அனைத்தும் மூட வேண்டும் என்று மதுவரி ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி சபையால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நட்சத்திர வகுப்பிற்கு மேல் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சிறப்பு பூட்டிக் வில்லா உரிமம் பெற்ற இடங்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பொருந்தாது.அதேநேரம், 23ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று, 

ரிமம் வகைப்படுத்தப்படாமல் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.இக்காலப்பகுதியில் இடம்பெறும் மதுவரி குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை மதுவரி திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 

1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள மதுவரி நிலையங்கள் மற்றும் விசேட பிரிவுகளுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு