நீர்கொழும்பு - கொச்சிக்கடை - சீதுவ பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு பொலிஸார் அதிரடி நடவடிக்கை, 15 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி தொற்று...

ஆசிரியர் - Editor I
நீர்கொழும்பு - கொச்சிக்கடை - சீதுவ பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு பொலிஸார் அதிரடி நடவடிக்கை, 15 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி தொற்று...

நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையங்களில் இடம்பெற்ற சோதனையின்போது, ​​அந்த நிலையங்களில் மசாஜ் சேவையில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 

தொற்றுக்குள்ளான இரு பெண்களில் ஒருவர் 15 வயதான சிறுமி என நீர்கொழும்பு பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுமி வீட்டில் இருந்து வௌியேறியுள்ளார். 

குறித்த சிறுமியை இனந்தெரியாத நபரொருவர் மசாஜ் நிலையத்தில் விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுமியுடன் உடலுறவு கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு மசாஜ் பணிப்பெண்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள அனைத்து மசாஜ் நிலையங்களையும் மூடுவதற்கு நீர்கொழும்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு