கடமையில் இருந்த இரு பொலிஸார் மீது தாக்குதல்! சந்தேகநபர்களை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...

ஆசிரியர் - Editor I
கடமையில் இருந்த இரு பொலிஸார் மீது தாக்குதல்! சந்தேகநபர்களை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற 4 சந்தேக நபர்கள் வாள் மற்றும் தடியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்துருவ பகுதியைச் சேர்ந்த 19, 27, 28 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.தாக்குதலுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அளுத்கம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஆறு பேருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சந்தேக நபர்கள் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, சம்பவ இடத்தில் இருந்த சிலர் தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை சுற்றி வளைத்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு