சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு அழைப்பு! - முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ள மைத்திரி.

ஆசிரியர் - Admin
சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு அழைப்பு! - முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ள மைத்திரி.

மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து முக்கிய உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.     

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு