McDonald's நிறுவனத்தின் 12 உணவகங்கள் இயங்க தடைவிதித்து கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் - Editor I
McDonald's நிறுவனத்தின் 12 உணவகங்கள் இயங்க தடைவிதித்து கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவு!

McDonald's வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திவயின செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் தாய் நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு