மோட்டார் சைக்கிளுடன் சிறிய கன்டர் வாகனம் மோதி கோர விபத்து, 47 வயதான பெண் பலி, 3 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளுடன் சிறிய கன்டர் வாகனம் மோதி கோர விபத்து, 47 வயதான பெண் பலி, 3 பேர் படுகாயம்...

ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் புத்தளம் - ஆனமடுவ பிரதான வீதியில் கல்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் புத்தளத்திலிருந்து ஆனமடுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முற்பட்டபோதே மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார். 

ஆனமடுவ வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், 

விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு