பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது..

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. 

இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு , இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில் 

பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நகையை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று 

தமது நகை தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு