தன்னுடன் தகாத உறவில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான 22 வயது நபர் கைது!

ஆசிரியர் - Editor I
தன்னுடன் தகாத உறவில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான 22 வயது நபர் கைது!

தகாத உறவில் ஈடுபட்ட பெண் ஒருவர் சீதுவை, முத்துவாடிய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.சந்தேக நபர் நேற்று (17) பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணைக் கொலை செய்து பலாங்கொடை பிரதேசத்திற்கு தப்பிச்சென்றுள்ள நிலையில் சுகயீனம் காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் 

அனுமதிக்கப்பட்டிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு