யாழ்.சங்கானையில் ஹெரோயினுடன் கைதான இளைஞளை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் ஹெரோயினுடன் கைதான இளைஞளை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

யாழில் ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது. 

சங்கானை பகுதியில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 

அதனால் இளைஞனை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, 

இளைஞனை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு