யாழ்.புலோலியில் இறைச்சிக்காக மாட்டை வெட்ட முயன்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தப்பி ஓட்டம், தயார் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.புலோலியில் இறைச்சிக்காக மாட்டை வெட்ட முயன்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தப்பி ஓட்டம், தயார் கைது!

சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு பொலிஸார் விரைந்திருந்தனர். 

பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனை அடுத்து இறைச்சியை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜபடுத்தியபோது , அவரை செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை தப்பியோடிய நபர் , முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் , பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய கால பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்வும் என பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு