யாழ்.புத்துார் - நவக்கிரி பகுதியில் வன்முறை கும்பல் அட்டகாசம், மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை...

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - நவக்கிரி பகுதியில் வன்முறை கும்பல் அட்டகாசம், மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை...

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வெள்ளிக்கிழமை (16) அதிகாலை 1:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பெற்றோர் குண்டு வீசி தீயிட்டு எரித்து வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் தமது வீட்டை உடைத்து மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு