மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு 25 ஆயிரம் தண்டம், 2 மாதகாலத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் ரத்து!

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு 25 ஆயிரம் தண்டம், 2 மாதகாலத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் ரத்து!

போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது. 

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, 

தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , சாரதி அனுமதி பத்திரத்தை 2 மாத காலத்திற்கு இரத்து செய்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு